Monday, September 9, 2013

வால்மீகி முனிவர் கதை


இன்று ஏழை. நாளை பணக்காரன். இன்று நல்லவன். நாளை கெட்டவன் என்று வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறும். அதனால்தான் நிச்சயம் இல்லாத மனித மனதுக்குள், இறைவன் இருக்கிறான் என்கிற நம்பிக்கையை உறுதியாக பதியவைத்தால் தீய செயல்பாடுகள் எதையும் செய்யாமல் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ வழி கிடைக்கும்.

நல்ல வாழ்க்கையை நல்லவர்களுக்கு இறைவன் தருகிறான் தீயவர்களுக்கும் தருகிறான். இறைவனை பொறுத்தவரை எல்லோருமே அவன் பிள்ளைகள். தவறுகளை திருத்திக்கொண்டு இறைவன் தந்த நல்ல வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக்கொண்டால் இறைவன் எப்போதும் துணை இருப்பான்.

ரத்னாகரன்

ஏழை குடும்பத்தில் பிறந்தவன் ரத்னாகரன். பெற்றோர்கள் அந்த ரத்னாகரனை நல்லவனாக வளர்த்தார்கள். குழந்தை பருவத்தில் வறுமை என்றால் என்ன என்று தெரியாதவரை அவனும் நல்லவனாகதான் வாழ்ந்தான். ரத்னாகரன் இப்போது ஒரு இளைஞன். அவன் தந்தைக்கும் வயதானது. முன்புபோல அவரால் வேலை செய்து சம்பாதிக்க முடியவில்லை. இதனால் வறுமை என்கிற கொடுமையும் ரத்னாகரனின் குடும்பத்தில் ஒருவராக குடிவந்தது. குடும்பமே உணவு இல்லாமல் பசி மயக்கத்தில் கிடப்பதை கண்டு மனம் வருந்தினான் ரத்னாகரன். என்ன செய்வது? என்று அவனுக்கு தெரியவில்லை. படிப்பறிவும் இல்லாத நமக்கு யார் வேலை தருவார்கள்? என்ற கேள்விச் சிந்தனையுடன் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தான்.
பலமணிநேரமாக ஒரே இடத்தில் அவன் இருப்பதை கண்ட ஒரு நபர் ரத்னகரனின் அருகில் வந்து, “தம்பி, உன்னை பார்த்தால் பசியில் இருப்பதாக நினைக்கிறேன். உனக்கு உணவு ஏற்பாடு செய்யட்டுமா?” என்றார்.

அதற்கு ரத்னாகரன், “அய்யா.. என் ஒருவனுக்கு இப்போது உணவு கிடைத்தால் போதுமா.? என்னை நம்பி இருக்கும் ஜீவன்கள் வீட்டிலே உணவு இல்லாமல் பசி மயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களையும் நான் காப்பாற்ற வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வேலை வேண்டும். எனக்கு நீங்கள் இன்று ஒருநாள் பிச்சையிடுவதை விட ஏதாவது ஒரு வேலையில் சேர்த்துவிடுங்கள்.” என்றான் ரத்னாகரன்.

“அதுவும் நல்லது. உனக்கு வேலைதானே வேண்டும். நான் ஏற்பாடு செய்கிறேன்.” என்றவர், ரத்னாகரனின் கைகளில் பணத்தை திணித்து, “இந்த பணத்தை நீ உன் குடும்பத்தினரிடம் தந்துவிட்டு மீண்டும் என்னிடம் திரும்பி வா. உனக்காக இங்கேயே காத்திருக்கிறேன்.” என்றார் அந்த நபர்.

அந்த பணத்தில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு விரைந்து வந்தான் ரத்னாகரன். உணவு மட்டுமல்லாமல் மகன் கை நிறைய பணத்துடன் வந்திருப்பதை இருப்பதை கண்ட அவன் பெற்றோர், அதை பற்றி கேட்டார்கள். நடந்ததை சொன்னான். எந்த வேலை, யார் கொடுப்பார் என்பதை பற்றியெல்லாம் விசாரித்து அறியாமல், “எந்த வேலையாக இருந்தாலும் அதை ஏற்று நீ செய்.” என்றார்கள். வறுமை அப்படி அவர்களை பேச வைத்தது.
தன்னை நம்பி பெரிய தொகையை கொடுத்த அந்த நபர் நிச்சயம் தெய்வம் என்று எண்ணி அவரை சந்திக்க சென்றான் ரத்னாகரன். ரத்னாகரனை தன் குதிரையில் ஏற்றி கொண்டு தன் வசிப்பிடத்திற்கு சென்றார் அந்த நபர். அந்த இடத்தை பார்த்தவுடன் புரிந்துக்கொண்டான் ரத்னாகரன்.

இவர்கள் கொள்ளைகாரர்கள்.

தன்னை அழைத்து வந்தவரும் இந்த கொள்ளைகூட்டத்தின் தலைவன்.
“நீங்கள் எல்லோரும் கொள்ளைகாரர்களா?.” என்றான் ரத்னாகரன்.

தன்னை அழைத்து வந்தவரும் இந்த கொள்ளைகூட்டத்தின் தலைவன்.
“நீங்கள் எல்லோரும் கொள்ளைகாரர்களா?.” என்றான் ரத்னாகரன்.

“சபாஷ் நீ தோற்றத்தில் பலசாலி என்று மட்டும்தான் நினைத்தேன். நாங்கள் யார் என்று நாங்கள் சொல்லாமலே புத்திசாலிதனமாக புரிந்துக் கொண்டாய்.” என்று கூறிகொண்டே. “ஆம். நாங்கள் கொள்ளைகாரர்கள்தான். நீயும் எங்களுடன் இணைந்து கொள்ளையடி. அந்த பணத்தை நாம் பங்கிட்டுக் கொள்வோம். கொள்ளை அடிக்கும்போது ஒரு வேலை கொலை செய்யவும் நேரலாம். அந்த தருணத்தில் அதையும் நீ தயங்காமல் செய். எந்த அரசனாலும் நம்மை தேடி கைது செய்ய முடியாது.” என்று ரத்னகரனின் மனதில் முரட்டு தைரியத்தை ஏற்படுத்தினான் கொள்ளை கூட்டத்தின் தலைவன்.

ரத்னாகரன் கொள்ளையடித்தான். பெரியதொகையை தினமும் சம்பாதித்தான். பணம் வந்த உடன் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ரத்னாகரனுக்கு திருமணமும் செய்து வைத்தனர் அவனுடைய பெற்றொர்.

ரத்னாகரன் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப சுமை கூடியதால் மேலும் அதிகமாக கொள்ளையடித்தான்.

காட்டில் கிடைத்த ஞானம்

ஒருநாள் காட்டுவழியாக கொள்ளையடிக்க சென்றுக் கொண்டு இருந்த ரத்னாகரன் கண்களில் ஒருவர் தன்னந்தனியாக தென்பட்டார். அவரை மடக்கி பிடித்து கத்தியை காட்டி, “இருப்பதை எடு. இல்லை என்றால் கொன்றுவிடுவேன்.” என்று மிரட்டினான் ரத்னாகரன்.

“தாராளமாக தருகிறேன். அதற்கு முன் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். நீ யாருக்காக கொள்ளையடிக்கிறாய்.” என்றார்.

“இது என்ன முட்டாள்தனமான கேள்வி. என் குடும்பத்திற்காகதான்.” என்றான் ரத்னாகரன்.

ஓ… அப்படியா. சரி… நீ கொள்ளையடித்து சம்பாதிப்பதையெல்லாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்ளும் உன் குடும்பம், உன் செயலால் உண்டாகும் பாவத்தையும் ஏற்பார்களா.?” எனக் கேட்டார்.

“ஏற்பார்கள்” என்றான் ரத்னாகரன்.

“இதை நீயே சொன்னால் எப்படி. இந்த கேள்வியை உன் குடும்பத்தினரிடம் சொல்லி அவர்களின் பதிலை கேட்டு வந்து சொல். நான் எங்கேயும் போக மாட்டேன். இங்கேயேதான் இருப்பேன்.” என்றார் அந்த நபர்.

அதன்படி தன் வீட்டுக்கு வந்த ரத்னாகரன், “நான் செய்யும் பாவங்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? எனக் கேட்டான்.

“அது எப்படி முடியும். உன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது உன் கடமை. அதனால் ஏற்படும் இன்ப-துன்பத்தையும் நீதான் ஏற்க வேண்டும். பாவமும் உன்னையே சேரும். அதில் எங்களுக்கு பங்கில்லை.” என்றார்கள். “உன் பாவத்தை நான் ஏற்று தண்டனையை அனுபவித்தால் உன் தந்தையை யார் கவனிப்பார்கள்.” என்றாள் தாய். “உன் பாவத்தை நான் ஏற்று தண்டனையை அனுபவித்தால் உன் தாயை யார் கவனிப்பார்கள்” என்றார் தந்தை. தன் மனைவியிடம் கேட்டான். “நீங்கள் செய்யும் பாவத்தை நான் எப்படி ஏற்க முடியும். பிறகு நம் மகனை யார் கவனிப்பார்கள். அதனால் நான் ஏற்க மாட்டேன்.” என்றாள் மனைவி. மகனிடம் கேட்டார். “நீங்கள்தானே என் தந்தை. அதனால் என்னை நன்றாக வளர்க்க வேண்டியதும் உங்கள் கடமை. அப்படி இருக்க உங்கள் பாவத்தை நான் எவ்வாறு கேட்க முடியும்.” என்றான் மகன். இப்படி ஒவ்வொருவரும் ஏதோரு காரணத்தை சொல்லி பாவத்தை ஏற்காமல் தட்டி கழித்தார்கள்.

மனம் வருந்திய ரத்னாகரன் காட்டில் பார்த்து பேசியவரை தேடி சோகத்துடன் வந்தான்.

மரா மரா

“என்ன ரத்னாகரா… உன் பாவத்தை பங்கிட்டுகொண்டதா உன் குடும்பம்.” என கேட்டார்.

“சுவாமி….நீங்கள் யார்?“ என்றார் ரத்னாகரன்.

“அதான் நீயே சுவாமி என்று சொல்லிவிட்டாயே. ஆனால் என்னையோ எல்லோரும் கலகக்காரன் என்கிறார்கள். நான் உன்னிடம் கலகமா செய்தேன்.” என்றவர் நாரதராக தோன்றினார்.

அவரை வணங்கினான் ரத்னாகரன்.

“சுவாமி…யார் உங்களை கலகக்காரன் என்று சொன்னாலும் நான் அப்படி சொல்ல மாட்டேன். உங்களால் எனக்கு இன்று ஒரு உண்மை விளங்கியது. மரம் செழுமையாக இருக்கும் போது பறவைகள் அதில் வாழும். அந்த மரம் பட்டு போனால் பறவைகள் ஒடிவிடும் என்பதை பார்த்திருக்கிறேன். அதுபோல என்னை ஒரு மனிதனாக பார்க்காமல் அந்த மரத்தை போலவே என்னை நினைக்கிறார்களே. அப்படி என்றால் அந்த மரத்தின் நிலையும், என் நிலையும் ஒன்றா? போதும் நான் செய்த பாவங்கள். என் பாவங்களுக்கு என்ன பரிகாரம் சுவாமி.?” என்றார் ரத்னாகரன். அவன் விழிகளில் மழைபோல கண்ணீர்.

“பாவம் தொலைய இரண்டெழுத்து மந்திரத்தை உண்டு. அதுதான் “இராமா” என்கிற மந்திரம். இராம நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க பாவம் தொலையும்.” என்றார் நாரத முனிவர்.

இதுநாள்வரை ரத்னாகரன் செய்த பாவங்கள் தடுத்ததோ என்னவோ, நாரதர் சொல்லி தந்த புனிதமான, “ராமா” என்கிற வார்த்தை ரத்னாகரன் நாவில் வரவில்லை. இதனால் நாரதர், “ரத்னாகரா… உன் வாயில் மரம் என்கிற வார்த்தை எளிதாக வருகிறது. அதனால் மரா மரா என்று உச்சரித்தப்படி இரு.” என்று கூறி சென்றார்.

அதன்படி தவத்துக்கான ஒரு இடத்தை தேர்வு செய்து அமர்ந்து, மரா மரா மரா மரா மரா மரா மரா மரா என்று உச்சரிக்க உச்சரிக்க அதுவே ராம ராம ராம ராம ராம என்று எளிதாக சொல்ல வந்தது

ரத்னாகரன் பல வருடங்களாக ஓரே இடத்தில் ராம நாமத்தை உச்சரித்து கொண்டே இருந்ததால் அவரை புற்று மூடியது. ஒருநாள் “வால்மீகி” என்று ஒரு அசரிரீ குரல் கேட்டது. புற்றிலிருந்து வெளிப்பட்டார் வால்மீகி.

ரத்னாகரனுக்கு அசரிரீ, “வால்மீகி” என்று புதிய பெயர் சூட்டியது. இதனால் அவரை வால்மீகி முனிவர் என்று ஊர்மக்களும் அழைத்தார்கள்.

ஒருசமயம், நதிகரையில் ஆண்பறவையும் பெண்பறவையும் அமர்ந்திருந்தது. அவற்றை பார்த்துக்கொண்டே குளித்தார் வால்மீகி. அப்போது எங்கிருந்தோ ஒரு அம்பு பறந்து வந்த ஆண்பறவையை தாக்கியது. இதனால் அந்த பறவை இறந்தது. இதை கண்ட வால்மீகி முனிவர் பெரும் கோபத்தோடு, அம்பு ஏய்த வேடனை கவிநடையில் சபித்துவிட்டு தன் ஆசிரமம் வந்தடைந்தார். பிறகுதான் தமக்கு “கவிஞானம்” வந்துவிட்டது என்பதை உணர்ந்தார்

அப்போது பிரம்மா வால்மீகி முனிவர் முன்தோன்றி, “நீ மிகபெரிய கவிஞனாக மாறினாய். எல்லாம் இராமனின் அருளே. நீ இராமசரித்திரத்தை எழுது.” என்று வரத்தை தந்தார்.

வால்மீகி முனிவரால் நமக்கு “இராமாயணம்” என்கிற பெரும் இராமகாவியம் கிடைத்தது.

தெய்வ ரகசியம்

ஒருஏழை தாயின் வயிற்றில் பிறந்த ரத்னாகரன், வளர்ப்பில் நல்லவனாக இருந்தும் சூழ்நிலையால் திருடனாக மாறி, பிறகு இன்னொரு சூழ்நிலையில் நாரதரை தரிசித்து, பிறகு வால்மீகி முனிவராக மாறி, ஸ்ரீஇராமரின் மனைவியான அன்னை சீதாதேவியை தன் மகளை போல பாதுகாத்து வந்து, இராமரின் பிள்ளைகளான லவ-குசனையும் நல்லமுறையில் வளர்த்து, அவர்களுக்கு குருவாக இருந்து பெரும் சிறப்படைவோம் என்று சாதாரண ரத்னாகரனாக இருந்தபோது வால்மீகி முனிவர் நினைத்திருப்பாரா.? நிச்சயமாக நினைத்திருக்க மாட்டார்.

ஒருவருடைய வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும் என்று எவராலும் சொல்லமுடியாது. அது தெய்வ ரகசியம். ஒரே தாயின் வயிற்றில், ஓரே நேரத்தில் பிறந்த இரு குழந்தைகளின் வாழ்க்கை அமைப்பு வெவ்வேறு விதமாக அமைகிறது. இதனை பூர்வபுண்ணியம் என்கிறது ஜோதிடசாஸ்திரம். தெய்வ ரகசியம் என்கிறது வேதம். அந்த தெய்வ ரகசியம் நல்லமுறையாக அமைய, நல்ல எண்ணங்களுடன் தெய்வத்தை நம்பிக்கையுடன் வணங்கி சிறப்பு பெறுவோம்.

வாழைப்பூ,முடக்கத்தான் தோசை
இது மதுரை ஸ்பெஷல்

                                                                                                                                                                             
ரகரிசியுடன் தினையைச் சேர்த்து பனியாரம், சோளத்தைச் சேர்த்து போண்டா என தொடங்கி வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, முடக்கத்தான் தோசை என உயிர்ச்சத்தான உணவுகளின் பட்டியல் நீள்கிறது, உழவன் உணவகத்தில்.
உழவன் உணவகம், முழுக்க முழுக்க விவசாயிகளால் நடத்தப்படும் இந்த உணவகம் மதுரையில் செயல்பட்டு வருகிறது. மற்ற உணவகங்களைப் போல இல்லாமல், கம்பு, தினை,சோளம், கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களால் இங்கு உணவுகள் தயாராகின்றன.

மாறிவரும் கலாச்சாரத்தின் தாக்கம் உடைகளில் மட்டுமல்ல, உணவுப் பழக்க வழக்கங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் மனிதனின் ஆரோக்கியம் கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், தானிய உணவுப் பொருட்களை பிரதானமாகக் கொண்டு செயல்படுகிறது ஒரு உணவகம்.
கலாச்சார மாற்றத்தில் பாரம்பரியத்தை மறந்த பலர், உழவன் உணவகத்திற்கு வந்து சாப்பிடுவதைப் பார்க்கமுடிகிறது. முற்றிலும் இயற்கையான உணவு வகைகள் என்பதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த உணவகத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். சத்தான உணவு மட்டுமின்றி நிலா வெளிச்சத்தில் கயிறு கட்டிலில் அமர்ந்தவாறு சாப்பிடும் வசதியும் உழவன் உணவகத்தில் உள்ளது.


உணவு வகைகளோடு, கேழ்வரகு முருக்கு, கேழ்வரகு பிஸ்கட், பாசிப்பருப்பு அல்வா என உடலுக்கு ஆரோக்கியம் தரும் நொறுக்குத் தீனிகளும் விற்கப்படுகின்றன. இதுதவிர, சுப நிகழ்ச்சிகளின் விருந்துகளுக்கு இங்கு ஆர்டர்களும் வாங்கப்படுகின்றன.

பீட்ஸா,பர்கருக்காக குளுகுளு உணவகங்கள் அதிகம் முளைக்கும் இந்த காலக்கட்டத்தில், உழவன் உணவகங்கள் வரவேற்கப்பட வேண்டியது அவசியம்



卐 விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 卐


எங்கள் வினைகள் அனைத்தையும் திர்க்கும் எல்லாம் வல்ல கணபதியே போற்றி

Sunday, September 8, 2013

கடன் தீர கணபதி மந்திரம்


ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா

கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.


மஹாஹஸ்தி விநாயகர்

பெரிய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.
அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.

ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
மஹாஹஸ்தி
தக்ஷ்ணேன

இள நரையை தடுபதர்க்கு!
இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையைத் தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்­ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.
சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா?

ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில்.
கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.

இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.
கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனைத் துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதனைத் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்று குழம்பிக்கொண்டிருக்கும் அனைவரும், ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் இருப்பதை நீங்கள் எளிதில் உணர முடியும். உங்கள் கஷ்டங்களை போக்குவது அந்த இறையருள் மட்டுமே. உங்கள் முயற்சிகள் தோல்வி அடையும் பட்சத்தில் , கடைசி நம்பிக்கை அளிப்பது அந்த இறைவன் மட்டுமே. அவரை துதிப்பவர்கள் மட்டும் தொல்லைகளில் இருந்து தப்புவார்களா? துதிக்கு மயங்கும் அளவுக்கா கடவுள் அற்பமானவர்? நாங்க எல்லாம் நேர்ல பார்த்த மட்டும் தான் நம்புவோமே.. என்று குதர்க்கமாக பேசும் அனைவருக்கும்...
நம் இந்த நூற்றாண்டின் , சென்ற நூற்றாண்டின் மகான்கள் - வள்ளலார், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் , ஓஷோ - அவர்களின் வாழ்க்கையும், போதனைகளும் ஒரு நல்லதொரு படிப்பினையாகவும், வழி காட்டியாகவும் அமையும்.

சுவாமி விவேகானந்தர் - பற்றிய இந்த கட்டுரை - கடவுள் இருக்கிறாரா? இல்லையா? கடவுளை யாரேனும் பார்த்து இருக்கிறார்களா? கடவுளை எனக்கு காட்ட முடியுமா? என்கிற உங்கள் பல கேள்விகளுக்கு - விடை அளிக்கும் .

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இளைஞர்களை "எழுமின் விழிமின்' என்று வீறு கொண்டு எழுச்சியுற அறை கூவல் விடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.

ஒரு துறவி ஆன்மிகப் பணி மட்டுமின்றி தேச உணர்வையும் மக்களுக்கு ஊட்ட முடியும் என்று தனது வாழ்நாளின் கடைசி மூச்சுவரை இந்திய இளைஞர்களை எழுச்சியுறச் செய்தது அவரது ஒப்பற்ற செயலாகும்.இந்திய நாடு என்றால் ஒரு இருண்ட நாடு, நாகரீகம் அற்ற மனிதர்கள் வாழும் இடம். அவர்களுக்குக் கல்வி அறிவு கிடையாது என்று நினைத்துக் கொண்டு இருந்த ஐரோப்பிய மக்களைத் தனது பேச்சாற்றல் மூலமும், தூய்மையான ஆன்மிக வாழ்க்கை மூலமும் இந்திய நாடு ரிஷிகளும், சித்தர்களும், அவதரித்த புண்ணிய பூமி, அனைத்துக் கலைகளும் தழைத்து ஓங்கி நிற்கும் ஒரு பல்கலைக் கழகம், உலக நாகரீகத்தின் முன்னோடியான நாடு என்று அனைவரையும் அறியச் செய்த பெருமை விவேகானந்தரையே சேரும்.

இந்தியாவை அன்று ஆட்சி புரிந்த ஆங்கிலேயருக்கு இதயப் பகுதியாக விளங்கிய கொல்கத்தாவில் விசுவநாத தத்தர் புவனேஸ்வரி தேவி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். விசுவநாத தத்தர் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற வக்கீல்களில் ஒருவர் ஆவார். இவர்களது குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஆன்மிகத்தையே தங்களது வாழ்க்கையில் முக்கியமான ஒரு அங்கமாக வைத்து வந்தது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தார்கள்.

Swami Vivekananda - My Ideal & Role Model

தனது குடும்பத்துக்கு ஆண் வாரிசு இல்லாமல் சென்று விடுமோ என்று மிகுந்த கவலையுடன் கோவில் கோவிலாகத் தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி வந்தார்கள்.இந்த நிலையில் புவனேசுவரி தேவி கர்ப்பமானார். 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் நாள் இந்துக்கள் மிகப்புனிதமாகக் கொண்டாடும் மகா சங்கராந்தியை (பொங்கல்) நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள்.

அதே வேளையில் புவனேசுவரி தேவியின் மகனாக சுவாமி விவேகானந்தர் பிறந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனக்குச் சிவனின் அருளால் ஆண் குழந்தை பிறந்ததால் பெற்றோர்கள் அந்தக் குழந்தைக்கு ""நரேந்திரன்'' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்குப் பொருத்தமாகக் குழந்தைப் பருவத்தில் நரேந்திரன் துருதுருவென்று மிகவும் துடிப்பாக இருந்தார்.நரேந்திரன் தனது வீட்டில் அக்காள்மாரிடம் செய்யும் சேட்டைகளுக்கும், சுட்டித் தனங்களுக்கும் அளவே கிடையாது. இதனால் வீட்டில் உள்ளவர்களும், அவர்களது வீட்டைச் சுற்றி உள்ளவர்களும் நரேந்திரனைப் "பிலே' என்று செல்லமாக அழைத்தனர்.

"பிலே'வின் சுட்டித்தனத்தைக் கட்டுப்படுத்த நினைத்த அவரது தந்தை விசுவநாத தத்தர் அவரைத் தனியாக கவனிப்பதற்குத் தாதிப் பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தினார். அந்தப் பெண் பிலேயுக்குப் புராணக் கதைகளைக் கூறினாள். மேலும் தனது அம்மா பூஜைகள், பஜனைகள் செய்யும் போது பிலேவும் அதில் ஈடுபடத் தொடங்கினான். இவ்வாறு அவனை அறியாது ஆன்மிகத்தில் இறங்க ஆரம்பித்தான்.நரேந்திரனுக்கு முதலில் வீட்டில் வந்து ஒரு ஆசிரியர் பாடம் கற்பித்தார். இதன் பின்னர் வித்யாசாகரின் மெட்ரோ பாலிடன் பள்ளியில் படித்தான். நரேந்திரன் பள்ளியில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை ஒரு முறை கவனித்தால் அதை அப்படியே நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்று இருந்தான்.நரேந்திரன் பள்ளிப் படிப்போடு குஸ்தி. உடற்பயிற்சி, விளையாட்டுக்கள், சிலம்பம் ஆகியவற்றையும் சேர்த்துப் படித்தான்.

நரேந்திரன் 1880ம் ஆண்டு தனது 17ம் வயதில் பி.ஏ. படிப்பை பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். இங்கு படிக்கும்போது தான் அவர் பிரம்ம சமாஜ அங்கத்தினராகச் சேர்ந்தார். அந்தச் சமயம் பிரம்ம சமாஜத்தின் தலைவராக ஸ்ரீகேசவசந்திர சேனர் இருந்தார். அவர் தமது பத்திரிகையின் மூலம் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சரின் புகழைப் பரப்பி வந்தார்.அதே நேரத்தில் நரேந்திரன் கிரேக்க, ஜெர்மனிய, ஆங்கில, அறிஞர்களின் பல புத்தகங்களைக் கற்றார். இதன் விளைவாகக் கடவுளை நேரில் காண முடியுமா? என்ற சந்தேகம் மனதில் ஏற்படத் தொடங்கியது.இது நாட்கள் செல்ல செல்ல அவருக்கு மிகுந்த மனக்குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் கொல் கத்தாவில் உள்ள எல்லா மதப் பெரியவர்களிடமும் சென்று விளக்கம் கேட்டார். ஆனால் அவரின் கேள்விக்குச் சரியான பதிலைக் கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் அவர் ஆழ்ந்த தியானங்களில் ஈடுபடத் தொடங்கினார். பிரம்ம சமாஜத்தின் ஒரு தலைவரான தேவேந்திரநாத் தாகூரை அணுகியும் அதேகேள்வியைக் கேட்டார். அவர் அதற்கு நரேந்திரனைக் கூர்ந்து நோக்கி ""உனக்கு யோகியின் கண்கள் இருக்கின்றன. நீ ஆழ்ந்து தியானம் செய்தால் அதனுடைய பலனை விரைவில் அனுபவிப்பாய்'' என்று கூறினார். ஆனால் இந்த பதிலால் அவர் சமாதானம் அடையவில்லை.ஒரு நாள் நரேந்திரன் கல்லூரியில் ஆங்கிலப் பாட வகுப்பில் இருந்து கொண்டு இருந்தார். அவருக்குக் கல்லூரி முதல்வர் வில்லியம் வேட்ஸ் வொர்த்தின் கவிதையிலுள்ள "பரவச நிலை' என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுக்கும் போது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைக் கண்டால் பரவசநிலை என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ளலாம் என்று விளக்கம் கொடுத்தார்.

இதைக் கேட்ட நரேந்திரனுக்கு ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக ஏற்பட்டது.இந்த நிலையில் நரேந்திரன் வீட்டு அருகே உள்ள சுரேந்திர பாபுவின் வீட்டுக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக வந்தார். அங்கு நரேந்திரனைப் பாடுமாறு அந்த வீட்டுக்காரர் அழைத்தார். அவரும் சென்று ""ஓ மனமே உனது சொந்த இடத்தை அடைவாயாக'' என்ற கருத்து அடங்கிய பாடலைத் தனது தேனிலும் இனிய குரலில் பாடினார். இதைக் கேட்ட ராமகிருஷ்ணர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்.இதன் பின்னர் ராமகிருஷ்ணர் நரேந்திரனிடம் ""ஒரு முறை தட்சிணேசுவரம் வா'' என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்டு 1881&ம் ஆண்டு நரேந்திரனும் அங்கு சென்றார். அங்கு அவரை பக்திப் பாடல்களைப் பாடும்படி ராமகிருஷ்ணர் கூறினார். அதனை ஏற்று அவரும் பாடினார்.

இதனைத் தொடர்ந்து ராமகிருஷ்ணர் நரேந்திரனைத் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் இவ்வளவு காலம் கழித்து வந்து இருக்கிறாயே இது நியாயமா? நான் உனக்காகத்தானே காத்து இருக்கிறேன் என்பதை ஒரு முறையாவது நினைத்துப் பார்த்தாயா? என்றும் உலக ஆசை பிடித்த மக்களின் பேச்சைக் கேட்டுக் கேட்டு என் காதுகள் எரிந்து போய் விட்டன என்றும் தேம்பித் தேம்பி அழுதபடி ராமகிருஷ்ணர் பேசி னார்.இதைக் கேட்ட நரேந்திரன் அவருக்குப் பைத்தியம் எதுவும் பிடித்து விட்டதோ என்று நினைத்தார்.

ஆனால் அந்த அறையை விட்டு வெளியே வந்த பின்னர் ராமகிருஷ்ணரின் ஆன்மிகப் பேச்சினையும், ஆனந்தப் பரவச நிலையையும் பார்த்து அவர் உண்மையான துறவி என்பதை உணர்ந்தார்.அடுத்த 4 ஆண்டுகளில் ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்சரின் தலைசிறந்த முக்கிய சீடர் ஆனார்.ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் 1885&ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டார். அவர் சமாதி அடைவதற்கு 3 நாட்களுக்கு முன் தனது சீடர் நரேந்திரனுக்குத் தனது சக்தி அனைத்தையும் வழங்கினார்.ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகஸ்டு மாதம் 16&ம்நாள் அதிகாலை 1 மணிக்கு மகாசமாதி அடைந்தார்.ஸ்ரீராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் நரேந்திரன் தனது சகோதர சீடர்களை ஒன்று கூட்டி வராக நகரின் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தவ வாழ்க்கை வாழ்ந்தனர். இதன் பின்னர் அனைவரும் துறவறம் பூண்டுயாசகம் எடுத்து வாழத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்ல தொடங்கினார்கள்.ஒரு முறை நரேந்திரன் ஆல்வின் ராஞூயத்துக்குச் சென்றார். அங்கு ஆண்ட ராஜா அவரை விருந்தினராக உபசரித்துத் தனது அரண் மனையில் தங்கச் செய்தார். ஒருநாள் ராஜா நரேந்திரனிடம் சுவாமிஜி! எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. இதனால் என் நிலை என்னவாகும் என்றார்? இதைக் கேட்ட நரேந்திரன் அங்கு சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ராஜாவின் தந்தை படத்தைக் கழற்றிவரச் செய்து அதன் மீது யாரேனும் ஒருவர் எச்சில் துப்புங்கள் என்றார்.இதைக் கேட்ட அனைவரும் அங்கு இருந்து விலகிச் சென்றனர்.

உடனே நரேந்திரன் ""ஏன் இதில் வெறும் காகிதமும், வர்ணக் கலவையும் தானே உள்ளது. பின் ஏன் எச்சில் துப்புவதற்கு மறுக்கிறீர்கள்? காரணம் இது உங்கள் மகாராஜாவின் உருவம், அதனால் மரியாதை கொடுக்கிறீர்கள். அது போலவே மக்கள் கடவுளை உருவத்தில் பார்க்கின்றார்கள். யாரும் கல்லே, மண்ணே செம்பே என்று கடவுள் வடிவத்தின் முன் நின்று வேண்டுவதில்லை என்று கூறினார்.இதைக் கேட்ட ராஜா நான் திருந்தினேன் எனக்கூறி நரேந்திரனிடம் மன்னிப்புக் கேட்டார்.

இதனைத் தொடர்ந்து நரேந்திரன் பிருந்தாவனம், அயோத்யா, ஆக்ரா, இமயம், மீரட், ராமேசுவரம் ஆகிய இடங்களுக்குச் சென்று விட்டுக் கடைசியாக பாரதத்தின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியை 1892&ம் ஆண்டு வந்து அடைந்தார்.அங்கு தேவியை வணங்கி வெளியே வந்த அவரது கண்ணுக்கு நடுக்கடலில் அமைந்து இருக்கும் பாறை ஒன்று தென்பட்டது. உடனே அந்தப் பாறைக்கு நீந்திச் சென்றார். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் அமர்ந்தார்.

அப்போதுதான் அவருக்கு பண்டைய பாரதப் பண்பாடு, இன்றைய வறுமை, தாழ்வு, மீண்டும் உலகின் முதல் நாடாக பாரதம் திகழப் போவதையும் உணர்ந்தார். அதில், தனது பணி என்ன என்பதை உணர்ந்தார்.இந்த நிலையில் கேத்ரி ராஜா தங்கள் அருளால் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் முதல் பிறந்த நாள் விழாவில் கண்டிப்பாக நீங்கள் கலந்து கொண்டு ஆசி வழங்க வேண்டும் என்று நரேந்திரனுக்குக் கடிதம் அனுப்பி இருந்தார்.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு நரேந்திரன் தனது பெயரை சச்சிதானந்தா என்றும் விவிதிஷானந்தா என்றும் மாற்றிக் கொண்டு சென்றார்.

விழா முடிந்த பின்னர் கேத்ரி ராஜா அஜித்சிங் சச்சிதானந்தாவிடம் இனி தங்கள் பெயரை அடிக்கடி மாற்றி கொள்ள வேண்டாம் "விவேகானந்தர்' என்ற பெயரையே நிலையாகச் சூட்டிக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பெயரைச் சூட்டினார்.

விவேகானந்தர் 1893 ம் ஆண்டு மே 31&ந் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரான சிக்காகோவுக்குப் புறப்பட்டார். ஜூலை மாதம் 31&ந் தேதி விவேகானந்தர் சிக்காகோவைச் சென்று அடைந்தார். விவேகானந்தர் அங்கு சென்ற உடன் சர்வ சமய மாநாட்டினைப் பற்றி விசாரித்தார். அதுசெப்டம்பர் முதல் வாரத்துக்குத் தள்ளிப் போடப்பட்டுள்ளது என்பதையும் அதில் கலந்து கொள்வதற்கு ஏதாவது ஒரு மதத்தின் நற்சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.அவ்வளவு நாட்கள் அங்கு தங்குவதற்குக் கையில் பணமும் இல்லை. அவர்கள் கேட்கும் நற்சான்றிதழும் இல்லை. ஒரு சில நாட்களில் அவர் கையில் இருந்த பணம் கரைந்து போனது. இதனால் சாப்பிடுவதற்கு உணவுகூட இல்லாமல் சில நாட்களை நகர்த்தி வந்தார்.

இதன் பின்னர் சிக்கா கோவில் இருந்து பாஸ்டனுக்குப் புறப்பட்டார். அங்கு அவருக்கு ரைட் என்ற பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் விவேகானந் தரைத் தனது வீட்டிலேயே தங்க வைத்து உபசரித்தார். பின்னர் ஹார்வாட் பல்கலைக் கழகத்தின் கிரேக்க மொழிப் பேராசிரியர் ஜே.டபிள்யூ.ரைட் என்பவரிடம் விவேகானந்தரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் விவேகானந் தருக்குப் புனித நற்சான்றிதழ் கிடைக்கச் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சிக்காகோ நகருக்கு விவேகானந்தர் புறப்பட்டு வந்தார்.சுவாமி விவேகானந்தர் எதிர்பார்த்துக் காத்து இருந்த அந்த செப்டம்பர் 11&ந் தேதியும் வந்தது. சர்வ சமய மாநாடும் தொடங்கியது. உலகில் உள்ள எல்லா மதத்தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது மதத்தினைப் பற்றிப் பேசிச் சென்றனர். அன்றைய நாளின் கடைசி ஆளாக சுவாமி விவேகானந்தர் பேசுவதற்கு அழைக்கப் பட்டார்.

சுவாமி விவேகானந்தர் தனதுபேச்சினை ""அமெரிக்கசகோதர! சகோதரி களே'' என்று பேச ஆரம்பித்ததும் அங்கு கூடி இருந்த 6 ஆயிரம் மக்களின் இதயங்களை ஒரு நொடிப் பொழுதில் கொள்ளை கொண்டார். அவர் தொடர்ந்து தனது பேச்சில் எல்லா மதங்களுக்கும் தாய் மதம் இந்து மதம். சகிப்புத் தன்மையை உலகிற்குக் கூறிய மதம் இந்து மதம். நதிகள் அனைத்தும் கடலில் சென்று கலக்கின்றன. அதுபோல சமயங்கள் பலவாகத் தோன்றினாலும், அனைத்தும் கடவுளைத்தான் சென்று அடை கின்றன என்று பேசினார்.அந்த மாநாட்டைப் பற்றி அடுத்த நாள் செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகளின் முதல் பக்கத்தை சுவாமி விவேகானந்தர் அலங்கரித்துக் கொண்டு இருந்தார்.

அவரது பெருமையைக் கேட்ட மக்கள் மாநாட்டுக்கு சுவாமி விவேகானந்தரின் பேச்சைக் கேட்பதற்கு என்று வரத் தொடங்கினார்கள்.இதனால் மாநாட்டில் மற்ற மத போதகர்கள் பேச்சு அலுப்புத் தட்டும்போது சுவாமி விவேகானந்தரைப் பேச அழைத்தனர். இதனால் அவரது புகழ் நாடுதாண்டிப் பரவத் தொடங்கியது.

சுவாமி விவேகானந்தர் 3 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது சொற்பொழிவை முடித்துக் கொண்டு 1896&ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.3 ஆண்டு காலமாக ஓய்வு இன்றி உழைத்ததின் காரணமாக அவரது உடல் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தது. 1897ம் ஆண்டு ஜனவரி 28ந் தேதி ராமேசுவரம் வந்த அவரை நாடு முழுவதும் ஒரு விழாவாக எடுத்துக் கொண்டாடி வரவேற்றது

கோட்டீஸ்வரர்

நீங்கள் கோட்டீஸ்வரராக வேண்டுமா?

1.ஒவ்வொரு தமிழ்மாதத்திலும் ஏதாவது ஒரு திங்கள் கிழமையன்று திருப்பதி சென்று ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும்.அங்கு எப்போதும்   கூட்டமாக இருக்கும் இல்லையா? நீங்கள் திங்கட்கிழமையன்று பெருமாளை தரிசித்துவிட வேண்டும்.இப்படி 12 திங்கட்கிழமைகள் அதாவது ஒருவருடம் வரை ஸ்ரீபாலாஜியை தரிசிக்க வேண்டும்.இப்படி செய்தால் நீங்கள் கோடீஸ்வரராவது உறுதி. 

உங்களது பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வரயோகம் இல்லாவிட்டாலும் கோடீஸ்வரர் ஆவது நிச்சயம் என்பது அனுபவ உண்மை.நீங்களும் ஒருமுறை டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

2.அமிதிஸ்டு என்ற ரத்தினம் அதாங்க ஜெம் நகைக்கடைகளில் கிடைக்கிறது.இந்த ரத்தினத்தின் பூர்வீகம் அமெரிக்கா.இந்தக்கல் இருக்கும் இடத்தில் வீண் செலவுகள் குறையும்.பணம் சேமிக்கும் காந்த அலைகளை இது வெளியிடுகிறது. இது ஒரு காரட் ரூ.100 அல்லது அதைவிடக் குறைவாகத்தான் இருக்கும்.குறைந்தது 10 காரட் வாங்கி பணம் வைக்குமிடத்தில் வைக்கவும்.உங்களது மணிபர்ஸிலும் வைக்கலாம்.நிறைய பணம் மிச்சமாகும்.

3.ஒவ்வொரு வருடமும் கார்த்திகைமாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மாலை 4.30 மணிக்கு திருஅண்ணாமலையில் உள்ள குபேரலிங்கம் சன்னதிக்கு வருக!!! அங்கு நடக்கும் நித்ய பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு , கிரிவலம் செல்ல வேண்டும். குபேர லிங்கத்தில் தொடங்கி , குபேர லிங்கத்தில் கிரிவலம் முடித்து , பின்பு உங்கள் இல்லம் திரும்ப வேண்டும்.

செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திருநள்ளாறு சனி பகவான்


இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.

சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.

கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.


எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு- ஸ்ரீதர்ப்பணேசவரர்   கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.


இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா விலிருந்து  பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.

இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன. இதைப் பற்றிய தகவல்கள் ஜூனியர் விகடனில் 2005 -06 வாக்கில் , வெளிவந்தது.

நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை..?

Saturday, September 7, 2013

எது மூட நம்பிக்கை?

எது மூட நம்பிக்கை?


ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் உண்டு. அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?

நாட்டு மக்கள் எல்லாரையுமே நாத்திகர்களாக ஆக்கிவிட முடியும் என்று நம்பித்தான் பெரியார் பிரசாரம் செய்தார். அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது? திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அந்தக் காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தார்கள். அதன் கதி என்ன?

நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்படுவது. அப்படி நடக்காமலும் போய்விடலாம். அப்போது அது மூடத்தனமாகிவிடுகிறது. ஆண்டவனை நம்புவதிலும், அதே நிலைதான். அது தோல்வியுற்றால் மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்.

ஆகவே, நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அதில் ஆஸ்திகன் மட்டுமென்ன தனி ஜாதி! இதுவரை எந்த நம்பிக்கை எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது? ஆனால், நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே மேற்கொள்கிறார்கள்? அதிலே மனத்துக்கு ஒரு சாந்தி.
 
தெய்வ நம்பிக்கை, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே ஏற்பட்டது. விஞ்ஞான நம்பிக்கையைப் போல் ஒரு கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி பெறுவதுதான் தெய்வ நம்பிக்கை.

"ஒரு சூத்திரதாரியின் கைப்பொம்மைகள் நாம்'' என்பது மறுக்க முடியாதது. மரணம் என்ற ஒன்று, அதைத் தினசரி வலியுறுத்துகிறது. இவ்வளவுக்குப் பிறகும், தெய்வ நம்பிக்கையைச் சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்களானால், "நான் ஒரு மூடன்' என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.

முட்டாள்தனத்தில் இருக்கிற நிம்மதி கெட்டிக்காரத்தனத்தில் இல்லை. உடம்பிலோ எல்லா நோயும் இருந்தும் "ஒன்றுமே இல்லை' என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே இருக்கிறான். ஒரு நோயும் இல்லாமலேயே ஒவ்வொரு மயிர்க்காலையும் பார்த்து, ""இது அதுவாக இருக்குமோ? என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி, நித்திய நோயாளியாகச் சாகிறான்.

"சுடு' என்று சொன்னவுடனேயே யாரைச் சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு வெற்றி தேடித் தந்திருக்கின்றன. அந்த நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால்... பகுத்தறிவு மிஞ்சும்... நாடு மிஞ்சாது!

போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்துக் கண்ணன் அதைத்தான் சொன்னான்.

"போர்' என்று வந்த பின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது' என்றான். கடைசியில் கண்ணன் மீது மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தைத் தூக்கினான். முடிவு வெற்றியாகக் கனிந்தது.

கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை வலியுறுத்துகிறது. பக்தியோகம், தியானத்தை வலியுறுத்துகிறது. கடமையும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது. தியானமும், நம்பிக்கையுடன் தான் நடைபெறுகிறது.

மனம் உண்டானால் வழி உண்டு' என்பது பெரியோர் வாக்கு. அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும். தியான தர்மத்துக்கும் பொருந்தும். ஆகவே, தெய்வ நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்வதைப் பற்றி நான் வருந்தவில்லை. இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப்போகிறார்கள்'' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு இருக்கிறதே! யார் என்ன செய்ய முடியும்?!           

Friday, September 6, 2013

திருவள்ளுவர்

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத இரகசியங்கள்

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக்… குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.           பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.             இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.              

Abdul Kalam

Photo

பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட்: தபால் வழியில் பங்குச் சந்தை பட்ட மேற்படிப்பு டிப்ளமா

BSE Institute
தபால் மூலம் பங்குச் சந்தை குறித்த பட்ட மேற்படிப்பு டிப்ளமாவை (PGDSM) பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட் (BSE Institute) அறிமுகப்படுத்தி இருக்கிறது.தபால் மூலம் பங்குச் சந்தை குறித்த பட்ட மேற்படிப்பு டிப்ளமாவை (PGDSM) பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட் (BSE Institute) அறிமுகப்படுத்தி இருக்கிறது.                       
இது இந்தியர்கள் பங்குச் சந்தை குறித்து அறிந்துக் கொள்ளும் அதே நேரத்தில் வேலை வாய்ப்பை பெற்று தரும் நிபுணத்துவம் வாய்ந்த படிப்பாக இருக்கிறது.
பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட் -ன் நிர்வாக இயக்குநர் அம்பரிஷ் தத்தா கூறும் போது, இந்தியாவில் பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. அதை அதிகரிக்க இந்த படிப்பு உதவும்’’ என்றார்.               
பங்குச் சந்தை குறித்த பட்ட மேற்படிப்பு டிப்ளமா இரண்டு செம்ஸ்டர்களை கொண்டது. படிப்பு முடிப்பவர்களுக்கு பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட் மற்றும் இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக் கழகம் (IGNOU) இணைந்து டிப்ளமா வழங்கும். காலாண்டுக்கு ஒரு முறை நேர்முக வகுப்புகளும் நடத்தப்படுகிறது. 
மேலும் விவரங்களுக்கு http://pgdsm.bsebti.com/
சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு  http://pgdsm.bsebti.com/addprocedure.html
வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களுக்கு http://pgdsm.bsebti.com/careers.html
உங்களால் முடியும்!
முயன்றால் உங்களால் முடியும்!
============================
vivekananda
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.
இறுதியில் ஜெயித்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்.உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.
பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர்.   வீட்டில் உள்ள நம் (இரு பால்) குழந்தைகள், இளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று தான் நாம் அனைவரும் உளமாற விரும்புகிறோம் – ஏன்? அதிகமாகவே ஆசைப்படுகிறோம். பிள்ளைகள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துக் கிடக்கும் பேராற்றலை வெளியேக் கொண்டு வருவது தான் ஆசிரியர்கள் பெற்றோர்களின் முக்கிய பணியாகும். பங்காகும்.
பிள்ளைகள் தவறு செய்யும் போது கூட உடனே கடும் மொழியில் பெற்றோர்கள் வசை மாறி பொழிவதை விட, தவறுகளைச் சுட்டிக் காட்டி, நல்ல அறிவுரைகள் சொல்லி, அவர்களின் நல்ல செயல்களை நன்றாக பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். “மொட்டு பூவாக மலர்வதைப் போல இயல்பாக அந்த பாராட்டு இருத்தல் வேண்டும்”.
”அடடா! இன்று உன் கையெழுத்து, நீ வாங்கி வந்த மதிப்பெண், வரைந்த ஓவியம், உடுத்திய உடை – இப்படி எல்லாமே அருமையாக இருக்கிறதே” – என்று பாராட்டிக் கொண்டே இருங்கள். அப்போது அந்த பிஞ்சு உள்ளத்தில் தன்னைப் பற்றிய நம்பிக்கை இன்னும் இதை விடச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் சாதனை எண்ணமும் ஆழமாக வேரூன்றும். “இனிய சொல் இரும்பு கதவைக் கூட திறந்து விடும்”. அது போல நம்முடைய முதல் பாராட்டு நாளை நம் பிள்ளைகளை இந்த சமுதாயமே பாராட்டும் படி அமைக்கும். எனவே பாராட்டை வீட்டிலிருந்தே தொடங்குங்கள் அதை தொடருங்கள்…
ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஒர் அற்புத ஆற்றல் ஓசையில்லாமல் மனதில் மறைந்திருக்கிறது. அதை உரிய முறையில் வெளிக்கொண்டு வருவது ஆசிரியர்களின் தலையாய கடமை. மாணவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழ்ந்துக் காட்டும் திறமையை முதுகில் தட்டிக் கொடுத்து மேலோங்கச் செய்வது அவர்களின் அறப்பணி மட்டுமல்ல அரும்பணியும் கூட.
உன்னதமான ஆசிரியர்கள் உள்ளத்தில் ஒளிப் பாய்ச்சுவார். பள்ளி பாடங்களைச் சொல்லிவிட்டு மட்டும் செல்பவராக இருந்து விடக் கூடாது. கற்பித்த பாடம், சொல்லிய கருத்து மாணவர்களிடம் சென்றடைந்ததா? என்பதை ஆசிரியர்கள் கவனிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் வகுப்பறைகள் வெறும் “கண்ணுக்கு விருந்தாக செவிக்கு உணவாக மட்டுமே காட்சி தரும். இறுதித் தேர்வு எனும் இரைப்பையை அது ஆட்சி செய்யாமல் போய்விடும்”. ஆசிரிய பெருதகைகள் மாணவர்களின் அறியாமை இருளை அகற்றும் வெளிச்ச தீபங்கள். இளைஞர்களை இலட்சிய பாதையில் நடைபயில செய்யும் எழுச்சி தீபங்கள்.
“முகம் – வீட்டு முகவரியை காட்டும், செயல்கள் – வாழ்க்கைக்கு முகவரி காட்டும்”. ஒருவன் உயர்ந்தால் அது அவனுடைய பெற்றோருக்கு மட்டும் பெருமை அல்ல; அந்த அளவிற்கு உயர, கல்வி எனும் அறிவு கண்ணை திறந்து வைத்த ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இளமைப்பருவம் வாழ்வின் வசந்த காலம். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த பருவம் தான்.
உழைப்பால் வெற்றியை உருவாக்கு.
முயற்சியை அதற்கு எருவாக்கு.
வாழ்க்கை ஒரு கணிதம்…
“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”. சிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.
நல்லனவற்றைக் கூட்டிக் கொள் ——–> +
தீயவற்றைக் கழித்துக் கொள் ———-> -
அறிவைப் பெருக்கிக் கொள் ———–> x
நேரத்தை வகுத்துக் கொள் ————> /
வெற்றி, தோல்வியை சமமாக கொள் –> =
வெற்றியை எவ்வாறு சாதனையாக்குவது?                                               தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “எட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.
கண்கள் தூக்கத்திற்கு சொந்தமானவை
கனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை…
“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற எனதருமை இளைஞர்களே! நம் நாட்டில் சுமார் இருபது கோடி இளைஞர்கள் இருக்கின்றீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் கனவு தொழிற்சாலைகள். இந்த கனவுகளுக்கெல்லாம் காரணம் டாக்டர் அப்துல் கலாம் அவர்களே! உங்கள் மீது கடலளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த கலாமின் நம்பிக்கைக்கு ஒரு சலாம் சொல்லுங்கள்.
வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ! நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்…
• ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.
• ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.
• ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.
• ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.
• ஒரு நாளின் மதிப்பு என்னவென்று – அன்று வேலை
கிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.
• ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.
• ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.
• ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.
• ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.
தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி + கடின உழைப்பு + நுண்ணறிவு + தன்னம்பிக்கை = ஐ. எ. எஸ். , ஐ. பி. எஸ். எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும். சாதிப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக, ஊன்றுகோலாக இருக்கும் இந்த பழமொழி, பழுத்த மொழி.
என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்?
இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?
சாதனையின் ஊற்றுக்கண் – இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே! “இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.
துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.
தீபந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும் பிரகாசிக்கும். “படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே… சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு…

நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியைப் பெற(28.8.13 முதல் 19.9.13வரை) ஒரு அரிய வாய்ப்பு!!!

கடந்த 25 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருப்பவர் நமது ஆன்மீக குரு.ஐயா சிவமாரியப்பன் என்ற சகஸ்ரவடுகர் அவர்கள்!!!ஐயா அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் ஏராளமான மனிதர்களின் பலதரப்பட்ட பிரச்னைகள் தீர காரணமாக இருக்கின்றன;



 கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும்,இந்தியாவின் பெரும்பாலான மாநகரங்களைச் சேர்ந்தவர்களும் ஐயாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்;எந்தவித பிரதிபலனின்றி தமது ஆன்மீக ஆராய்ச்சிமுடிவுகளால் ஐயா அவர்கள் பிறருக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்; 



சிலரது பிரச்னைகள் 18 வருடங்களாகவோ,அல்லது 20 வருடங்களாகவோ,அல்லது 30 வருடங்களாகவோ இருந்திருக்கின்றன;இந்தப் பிரச்னைகளில் குழந்தைப்பேறின்மை,பூர்வீகச் சொத்துப் பிரச்னை,முன்னேற்றத்தை சூட்சுமமாகத் தடுக்கும் செயல்களால் குடும்பத்தினுள் குழப்பம் அல்லது தீராத நோய்,தொழில் முடக்கம்,நீண்ட காலக் கடன் அல்லது வராக்கடன்,திருமணத் தடை,தொழில் கூட்டாளிகளுடன் பிரச்னை,விபரீதமான நோய்கள் அல்லது சுபாவங்களால் கணவன்  மனைவிக்குள் ஒற்றுமையின்மை,பித்ரு தோஷம்,பிடித்த துறையில் சாதிக்க முடியாமல் தடுமாறுதல்,வீண் பழி மற்றும் அவமானத்தால் தனிமையில் விரக்தியோடு வாழ்ந்து வருதல்(ஆனால்,இவர்களின் மனதில் தாம் தமது குடும்பத்தாரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்);கடுமையான கர்மவினைகளை ஜோதிடத்தின் மூலமாகவோ,ஜீவ நாடியின் மூலமாகவோ அறிந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தும் கூட தாம் நிம்மதியான மற்றும் வசதியான வாழ்க்கை வாழ முடியாமல் தவிப்பவர்கள்;



பலருக்கு நல்ல வேலை அல்லது தொழில் இருந்தும் கூட அவர்கள் மனதில் தாம் விரும்பும் சித்தரை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும்;சிலருக்கு தாம் இந்தப் பிறவியிலேயே சித்தராக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பார்கள்;



சிலர் சிவ வழிபாடு அல்லது குலதெய்வ வழிபாடு அல்லது சித்தர் உபாசனை அல்லது முன்னோர்கள் உபாசனை அல்லது மகான்கள் உபாசனையை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும்;குலதெய்வத்துடன் நேரடியாகப் பேச வேண்டும் என்ற எண்ணங்கள் அடிக்கடி மேலோங்கும்;


சிலர் ஆன்மீக வாழ்க்கையில் வாசி யோகம்,குண்டலினி சக்தியை எழுப்புதல் முதலான ஏராளமான முயற்சிகளுக்கு தகுந்த குருவைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.




சிலர் மூலிகைகள்,பஞ்சாங்கத்தின் துணை கொண்டு சித்தராக முயற்சி செய்வதும் உண்டு;சரியான குரு கிட்டாமல் ஏங்கிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.


மேலே கூறப்பட்டிருக்கும் ஆன்மீக முன்னேற்றத்தினை விரும்புபவர்கள் நமது ஐயா அவர்களை தினமும் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் நேரடியாக சந்திக்கலாம்;


முன் அனுமதியைப் பெற: ஆன்மீகக்கடல் கை.வீரமுனி  9092116990  என்ற எண்ணுக்கு அழைக்கவும். ஒரு நாளில் ஏதாவது இரண்டு மணி நேரம் மட்டும் இந்த எண்ணில் பேசலாம்; மிஸ்டு கால் தருவதைத் தவிர்க்கவும்.ஐயாவை டெஸ்ட் பண்ணுவதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்;


ஐயாவை சந்தித்து ஆசிர்வாதம் பெறும் போது நீங்கள் என்ன வேண்டுகிறீர்களோ,அந்த வேண்டுதல் நிச்சயமாக குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறும்.அவ்வாறு,நிறைவேறியப் பின்னர்,சந்திக்க அனுமதி கிட்டும்;ஆர்ப்பாட்டமில்லாமல் வந்து,ஆசி பெற்றுவிட்டு மட்டும் செல்லவும்;


நமது ஐயாவைச் சந்திப்பதன் மூலமாக நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனை அமையும்!!!


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
Share