Friday, September 6, 2013

திருவள்ளுவர்

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத இரகசியங்கள்

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக்… குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.           பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.             இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.              

Abdul Kalam

Photo

பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட்: தபால் வழியில் பங்குச் சந்தை பட்ட மேற்படிப்பு டிப்ளமா

BSE Institute
தபால் மூலம் பங்குச் சந்தை குறித்த பட்ட மேற்படிப்பு டிப்ளமாவை (PGDSM) பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட் (BSE Institute) அறிமுகப்படுத்தி இருக்கிறது.தபால் மூலம் பங்குச் சந்தை குறித்த பட்ட மேற்படிப்பு டிப்ளமாவை (PGDSM) பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட் (BSE Institute) அறிமுகப்படுத்தி இருக்கிறது.                       
இது இந்தியர்கள் பங்குச் சந்தை குறித்து அறிந்துக் கொள்ளும் அதே நேரத்தில் வேலை வாய்ப்பை பெற்று தரும் நிபுணத்துவம் வாய்ந்த படிப்பாக இருக்கிறது.
பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட் -ன் நிர்வாக இயக்குநர் அம்பரிஷ் தத்தா கூறும் போது, இந்தியாவில் பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. அதை அதிகரிக்க இந்த படிப்பு உதவும்’’ என்றார்.               
பங்குச் சந்தை குறித்த பட்ட மேற்படிப்பு டிப்ளமா இரண்டு செம்ஸ்டர்களை கொண்டது. படிப்பு முடிப்பவர்களுக்கு பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட் மற்றும் இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக் கழகம் (IGNOU) இணைந்து டிப்ளமா வழங்கும். காலாண்டுக்கு ஒரு முறை நேர்முக வகுப்புகளும் நடத்தப்படுகிறது. 
மேலும் விவரங்களுக்கு http://pgdsm.bsebti.com/
சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு  http://pgdsm.bsebti.com/addprocedure.html
வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களுக்கு http://pgdsm.bsebti.com/careers.html
உங்களால் முடியும்!
முயன்றால் உங்களால் முடியும்!
============================
vivekananda
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.
இறுதியில் ஜெயித்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்.உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.
பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர்.   வீட்டில் உள்ள நம் (இரு பால்) குழந்தைகள், இளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று தான் நாம் அனைவரும் உளமாற விரும்புகிறோம் – ஏன்? அதிகமாகவே ஆசைப்படுகிறோம். பிள்ளைகள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துக் கிடக்கும் பேராற்றலை வெளியேக் கொண்டு வருவது தான் ஆசிரியர்கள் பெற்றோர்களின் முக்கிய பணியாகும். பங்காகும்.
பிள்ளைகள் தவறு செய்யும் போது கூட உடனே கடும் மொழியில் பெற்றோர்கள் வசை மாறி பொழிவதை விட, தவறுகளைச் சுட்டிக் காட்டி, நல்ல அறிவுரைகள் சொல்லி, அவர்களின் நல்ல செயல்களை நன்றாக பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். “மொட்டு பூவாக மலர்வதைப் போல இயல்பாக அந்த பாராட்டு இருத்தல் வேண்டும்”.
”அடடா! இன்று உன் கையெழுத்து, நீ வாங்கி வந்த மதிப்பெண், வரைந்த ஓவியம், உடுத்திய உடை – இப்படி எல்லாமே அருமையாக இருக்கிறதே” – என்று பாராட்டிக் கொண்டே இருங்கள். அப்போது அந்த பிஞ்சு உள்ளத்தில் தன்னைப் பற்றிய நம்பிக்கை இன்னும் இதை விடச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் சாதனை எண்ணமும் ஆழமாக வேரூன்றும். “இனிய சொல் இரும்பு கதவைக் கூட திறந்து விடும்”. அது போல நம்முடைய முதல் பாராட்டு நாளை நம் பிள்ளைகளை இந்த சமுதாயமே பாராட்டும் படி அமைக்கும். எனவே பாராட்டை வீட்டிலிருந்தே தொடங்குங்கள் அதை தொடருங்கள்…
ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஒர் அற்புத ஆற்றல் ஓசையில்லாமல் மனதில் மறைந்திருக்கிறது. அதை உரிய முறையில் வெளிக்கொண்டு வருவது ஆசிரியர்களின் தலையாய கடமை. மாணவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழ்ந்துக் காட்டும் திறமையை முதுகில் தட்டிக் கொடுத்து மேலோங்கச் செய்வது அவர்களின் அறப்பணி மட்டுமல்ல அரும்பணியும் கூட.
உன்னதமான ஆசிரியர்கள் உள்ளத்தில் ஒளிப் பாய்ச்சுவார். பள்ளி பாடங்களைச் சொல்லிவிட்டு மட்டும் செல்பவராக இருந்து விடக் கூடாது. கற்பித்த பாடம், சொல்லிய கருத்து மாணவர்களிடம் சென்றடைந்ததா? என்பதை ஆசிரியர்கள் கவனிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் வகுப்பறைகள் வெறும் “கண்ணுக்கு விருந்தாக செவிக்கு உணவாக மட்டுமே காட்சி தரும். இறுதித் தேர்வு எனும் இரைப்பையை அது ஆட்சி செய்யாமல் போய்விடும்”. ஆசிரிய பெருதகைகள் மாணவர்களின் அறியாமை இருளை அகற்றும் வெளிச்ச தீபங்கள். இளைஞர்களை இலட்சிய பாதையில் நடைபயில செய்யும் எழுச்சி தீபங்கள்.
“முகம் – வீட்டு முகவரியை காட்டும், செயல்கள் – வாழ்க்கைக்கு முகவரி காட்டும்”. ஒருவன் உயர்ந்தால் அது அவனுடைய பெற்றோருக்கு மட்டும் பெருமை அல்ல; அந்த அளவிற்கு உயர, கல்வி எனும் அறிவு கண்ணை திறந்து வைத்த ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இளமைப்பருவம் வாழ்வின் வசந்த காலம். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த பருவம் தான்.
உழைப்பால் வெற்றியை உருவாக்கு.
முயற்சியை அதற்கு எருவாக்கு.
வாழ்க்கை ஒரு கணிதம்…
“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”. சிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.
நல்லனவற்றைக் கூட்டிக் கொள் ——–> +
தீயவற்றைக் கழித்துக் கொள் ———-> -
அறிவைப் பெருக்கிக் கொள் ———–> x
நேரத்தை வகுத்துக் கொள் ————> /
வெற்றி, தோல்வியை சமமாக கொள் –> =
வெற்றியை எவ்வாறு சாதனையாக்குவது?                                               தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “எட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.
கண்கள் தூக்கத்திற்கு சொந்தமானவை
கனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை…
“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற எனதருமை இளைஞர்களே! நம் நாட்டில் சுமார் இருபது கோடி இளைஞர்கள் இருக்கின்றீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் கனவு தொழிற்சாலைகள். இந்த கனவுகளுக்கெல்லாம் காரணம் டாக்டர் அப்துல் கலாம் அவர்களே! உங்கள் மீது கடலளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த கலாமின் நம்பிக்கைக்கு ஒரு சலாம் சொல்லுங்கள்.
வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ! நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்…
• ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.
• ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.
• ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.
• ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.
• ஒரு நாளின் மதிப்பு என்னவென்று – அன்று வேலை
கிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.
• ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.
• ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.
• ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.
• ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.
தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி + கடின உழைப்பு + நுண்ணறிவு + தன்னம்பிக்கை = ஐ. எ. எஸ். , ஐ. பி. எஸ். எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும். சாதிப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக, ஊன்றுகோலாக இருக்கும் இந்த பழமொழி, பழுத்த மொழி.
என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்?
இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?
சாதனையின் ஊற்றுக்கண் – இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே! “இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.
துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.
தீபந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும் பிரகாசிக்கும். “படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே… சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு…

நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியைப் பெற(28.8.13 முதல் 19.9.13வரை) ஒரு அரிய வாய்ப்பு!!!

கடந்த 25 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருப்பவர் நமது ஆன்மீக குரு.ஐயா சிவமாரியப்பன் என்ற சகஸ்ரவடுகர் அவர்கள்!!!ஐயா அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் ஏராளமான மனிதர்களின் பலதரப்பட்ட பிரச்னைகள் தீர காரணமாக இருக்கின்றன;



 கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும்,இந்தியாவின் பெரும்பாலான மாநகரங்களைச் சேர்ந்தவர்களும் ஐயாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்;எந்தவித பிரதிபலனின்றி தமது ஆன்மீக ஆராய்ச்சிமுடிவுகளால் ஐயா அவர்கள் பிறருக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்; 



சிலரது பிரச்னைகள் 18 வருடங்களாகவோ,அல்லது 20 வருடங்களாகவோ,அல்லது 30 வருடங்களாகவோ இருந்திருக்கின்றன;இந்தப் பிரச்னைகளில் குழந்தைப்பேறின்மை,பூர்வீகச் சொத்துப் பிரச்னை,முன்னேற்றத்தை சூட்சுமமாகத் தடுக்கும் செயல்களால் குடும்பத்தினுள் குழப்பம் அல்லது தீராத நோய்,தொழில் முடக்கம்,நீண்ட காலக் கடன் அல்லது வராக்கடன்,திருமணத் தடை,தொழில் கூட்டாளிகளுடன் பிரச்னை,விபரீதமான நோய்கள் அல்லது சுபாவங்களால் கணவன்  மனைவிக்குள் ஒற்றுமையின்மை,பித்ரு தோஷம்,பிடித்த துறையில் சாதிக்க முடியாமல் தடுமாறுதல்,வீண் பழி மற்றும் அவமானத்தால் தனிமையில் விரக்தியோடு வாழ்ந்து வருதல்(ஆனால்,இவர்களின் மனதில் தாம் தமது குடும்பத்தாரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்);கடுமையான கர்மவினைகளை ஜோதிடத்தின் மூலமாகவோ,ஜீவ நாடியின் மூலமாகவோ அறிந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தும் கூட தாம் நிம்மதியான மற்றும் வசதியான வாழ்க்கை வாழ முடியாமல் தவிப்பவர்கள்;



பலருக்கு நல்ல வேலை அல்லது தொழில் இருந்தும் கூட அவர்கள் மனதில் தாம் விரும்பும் சித்தரை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும்;சிலருக்கு தாம் இந்தப் பிறவியிலேயே சித்தராக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பார்கள்;



சிலர் சிவ வழிபாடு அல்லது குலதெய்வ வழிபாடு அல்லது சித்தர் உபாசனை அல்லது முன்னோர்கள் உபாசனை அல்லது மகான்கள் உபாசனையை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும்;குலதெய்வத்துடன் நேரடியாகப் பேச வேண்டும் என்ற எண்ணங்கள் அடிக்கடி மேலோங்கும்;


சிலர் ஆன்மீக வாழ்க்கையில் வாசி யோகம்,குண்டலினி சக்தியை எழுப்புதல் முதலான ஏராளமான முயற்சிகளுக்கு தகுந்த குருவைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.




சிலர் மூலிகைகள்,பஞ்சாங்கத்தின் துணை கொண்டு சித்தராக முயற்சி செய்வதும் உண்டு;சரியான குரு கிட்டாமல் ஏங்கிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.


மேலே கூறப்பட்டிருக்கும் ஆன்மீக முன்னேற்றத்தினை விரும்புபவர்கள் நமது ஐயா அவர்களை தினமும் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் நேரடியாக சந்திக்கலாம்;


முன் அனுமதியைப் பெற: ஆன்மீகக்கடல் கை.வீரமுனி  9092116990  என்ற எண்ணுக்கு அழைக்கவும். ஒரு நாளில் ஏதாவது இரண்டு மணி நேரம் மட்டும் இந்த எண்ணில் பேசலாம்; மிஸ்டு கால் தருவதைத் தவிர்க்கவும்.ஐயாவை டெஸ்ட் பண்ணுவதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்;


ஐயாவை சந்தித்து ஆசிர்வாதம் பெறும் போது நீங்கள் என்ன வேண்டுகிறீர்களோ,அந்த வேண்டுதல் நிச்சயமாக குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறும்.அவ்வாறு,நிறைவேறியப் பின்னர்,சந்திக்க அனுமதி கிட்டும்;ஆர்ப்பாட்டமில்லாமல் வந்து,ஆசி பெற்றுவிட்டு மட்டும் செல்லவும்;


நமது ஐயாவைச் சந்திப்பதன் மூலமாக நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனை அமையும்!!!


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
Share