Friday, May 27, 2016

வெகு வேகமாக செயலாற்ற கூடிய ஒரு இரகசிய மந்திரம்
💐💐💐💐💐
ஆம் மானிட வாழ்க்கையில் செல்வம் செல்வாக்கு உணவுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை ஆடை ஆபரணங்கள் வீடு நில புலன்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வண்டி வாகனங்கள் ஆகியவற்றை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள் அருள் இல்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை எனவே உங்கள் வாழ்க்கைக்கு பொருளாதார வசதிகளை காந்தம் போல கவர்ந்திழுக்க கூடிய அற்புதமான கணபதி மந்திரம் இந்த மந்திரம் வெகு வேகமாக செயல்படுதாக பல தாந்த்ரீக உபாசகர்கள் அனுபவத்தில் சொல்லியுள்ளனர்
இந்த மந்திர உபாசனையை ஏதெனும் ஒரு செவ்வாய் கிழமையில் ஆரம்பிக்கவும் கணபதி படத்தையும் லட்சுமி படத்தையும் எடுத்து வைத்து படத்திற்கு வழக்கம் போல் பூ பொட்டு வைக்கவும் பசு நெய்யில் விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்
படையல் தங்கல் வசதிக்கேற்ப படைக்கவும்
பூஜையை ஆரம்பிக்கும் முன் குரு தட்சிணா மூர்த்தியை தங்கள் மானசீக குருவாக நினைத்து அவர் உங்கள் எதிரில் இருப்பதாக பாவித்து அவரது வலதுகரம் உங்கள் தலை மீது இருப்பதாக நினைத்து வணங்கவும்
பின்னர் கனபதியையும் மகாலட்சுமியையும் மனதார வேண்டிக்கொண்டு இறைவா எனக்கு என்ன வேண்டும் என்று உனக்குதான் தெரியும் பிள்ளைக்கு என்ன வேண்டுமென்று தாய்க்கு
தெரியாதா எனவே நீங்கள் எதை கொடுத்தாலும் எனக்கு சந்தோஷமே என பிரார்த்தனை செய்து ருத்ராக்ஷம் அல்லது பவள மாலை அல்லது சிவப்பு சந்தன அல்லது ஏதேனும் சிவப்பு நிற ஜெபமாலையை கையில் வைத்து கொண்டு மந்திர சாதனையை தொடங்கவும் அதாவது 500000 (ஐந்து இலட்சம்) உரு 48 நாட்களுக்குள் சொல்லி முடிக்க வேண்டும் அதாவது ஒரு நாளைக்கு தோரயமாக 10417 உரு கொடுக்கவேண்டும் அதாவது ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பகலிலோ இரவிலோ உபாசணைக்கு ஒதுக்கினால் ஒரு மணி நேரத்திற்கு 8 சுற்றுகள் ஜெப மாலையை உருட்ட வேண்டும் ஒரு சுற்று என்பது 108 எண்ணிக்கை கொண்ட ஜப மாலையாகும்
இந்த 48 நாட்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும் அது வீட்டில் சமைக்கபட்டதாக இருக்க வேண்டும் ஓட்டலில் அல்லது வேறு எங்கும் வெளியில் சாப்பிடக்கூடாது மேலும் எந்த பழங்களும் பழரச பாணங்களும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது சிறிது நீர் மட்டுமே அருந்தலாம் இந்த விதிமுறைகளை பின் பற்ற உறுதி கொண்ட நெஞ்சத்தினர் இந்த உபாசனையை கடைபிடிக்கலாம் 48 நாட்களுக்கு பிறகு பலன் தெரிய ஆரம்பிக்கும்
மந்திரம்
OM HREEM GREEM HREEM
ஓம் ஹ்ரீம் கிரீம் ஹ்ரீம்
ஆங்கிலத்தில் உள்ளபடி ஒலியெழுப்பி உச்சரிக்க வேண்டும்💐💐💐
Comment

No comments:

Post a Comment